Sunday, 24 July 2016

கபாலி இசை

கபாலி இசை  குறித்து முகநூலில் 12.06.2016 அன்று இட்ட பதிவு.


சந்தோஷ் நாராயணன்-ரஞ்சித்-ரஜினிகாந்த்-மலேசிய தமிழர் பின்புலம்.
சந்தோஷ் நாராயணன்- ஜிகர்தண்டா பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் என் கவனத்தை மிகவும் ஈர்த்தார். தமிழில் Ennio Morricone இசையமைத்தால் எப்படி இருக்கும் என்று ஒரு தரமான மிரட்டலான  பின்னணி இசையளித்தார். யாருப்பா இப்படி கலக்குரார்னு பார்த்தா, ரஹ்மான் ஒருமுறை தனக்குப்பிடித்த  தமிழ் இசையமைப்பாளர் யார் என்பதை கூறியிருந்தது ஞாபகம் வந்தது. கார்த்திக் சுப்பாராஜ் Quentin Tarantino சாயலில் ஒரு கதை சொல்ல, சந்தோஷ்  Ennio Morricone போல ஒரு இசைவிருந்தை கொடுத்தார். அருமை! இவர் இசையை சூது கவ்வும், அட்டைக்கத்தி, மெட்ராஸ், என தேடிக்கேட்டேன். கபாலி எப்படி இருக்கும் என்று காத்திருந்தேன்.. நேற்றிலிருந்து இசைகேட்டு அந்த இசையின் மயக்கத்தில், பாடல்களை கேட்டபடியே இந்தப்பதிவிடுகிறேன். நெருப்புடா! இதை தான் முதலில் கேட்க்கத்தோன்றும். மெலடி வகையை சேர்ந்த பாடல்களில் ஆர்வம் கேட்க்க கேட்க்கத்தான் மேலோங்கும். மாய நதி - அருமையான பாடல்வரிகளுடன் கேட்க்க அருமையாகவும் இதமாகவும் இருக்கிறது. பாடகரின் குரலுக்கு 'autotune' என்ற அள்ளக்கை வந்து பலர் கெடுக்கவும், அதை தவிர்த்து சந்தோஷ் இசையமைப்பதாக தோன்றுகிறது. 36 வயதினிலே 'வாடி ராசாத்தி' ஜிகர்தண்டாவில்  'கண்ணம்மா' போன்ற பாடல்களில் சந்தோஷ் பயன்படுத்தியிருக்கும் 'raw voice' அருமையாக இருக்கிறது. அதைப்போல பிரதீப் குமார் குரல் பிரமாதமாக இருக்கிறது. காணா பாலாவை வைத்து பீட்சா  'நினைக்குதே'  Jazz வகையில் ஒரு விருந்தளித்தார். கபாலியில் எனக்கு மிகவும் பிடித்தது வீர துரந்திரா! பின்னணியில் என்ன மாயம் பண்ணி இருப்பார் என்று காத்திருக்கலாம். Worth waiting.

ரஞ்சித் - மெட்ராஸ் தான் முதலில் நான் பார்த்த ரஞ்சித் படம். வடசென்னை எப்படி இருக்கும், அங்கே நடக்கும் அரசியல் என்று அருமையாக கொடுத்திருந்தார். மிகைப்படுத்தாமல் அனைவரையும் நடிக்கவைத்திருப்பார். சமீபத்தில் தான் அட்டைக்கத்தி பார்த்தேன் அதுவும் அருமை. ரஜினியை வைத்து இவர் இயக்கவிருக்கிறார் என்றவுடன் ஆர்வம் கூடியது. பாடல் வரிகளில் இவரின் சித்தாந்தங்கள் அருமை. இவர் கருத்துக்களை ரஜினிகாந்த்தை வைத்து சொல்ல இருப்பது ஆர்வத்தை தூண்டுகிறது. ரஞ்சித்துக்கு இது மூன்றாவது படமே. ரஞ்சித் படத்தில் ரஜினி. மகிழ்ச்சி!

ரஜினிகாந்த் - முல்லைப்பெரியார் பற்றி சொல்லாமல் சொன்ன படம் லிங்கா, negative publicity விநியோகஸ்தர்கள் அந்த படத்தை ஒரே நேரத்தில் பல திரையரங்கத்தில் 5 வேலை ஓட்டி லாபம் சம்பாதிக்க நினைத்து ஒரு தவறை செய்து அந்த படத்தை கொன்றனர். வீழ்ந்தது ரஜினி மந்திரம் என்று நண்டு சிண்டு ரசிகர்கூட்டம் கொக்கரிக்க. கபாலி 'teaser' வந்து புதிய பல சாதனைகளை படைத்தது. ரஞ்சித்தை தேர்வு செய்து ரஞ்சித் படமாக இது உருவாக விட்டதில் ரஜினி ஏன் இவ்வளவு ஆண்டுகளாக ஒரு வியாபார நடிகராக திகழ முடிகிறது என்பதை நிரூபித்தார். மக்கள் அவர் படங்களை பார்க்க விரும்புகின்றனர், மக்களுக்கு பிடித்தவாறு தன் படங்களை அமைக்க நினைக்கிறார். ரஜினி கூறியபடி 'கலைக்காக படம் பண்ணவில்லை, அதை கமலஹாசன் செய்கிறார், என் படங்கள் பலருக்கு வியாபாரம் செய்ய பயன்படுகிறது, இந்த வழியில் நான் போகிறேன்', அவர் நாட்டுக்கு எதுவும் செய்யவில்லை என்றால், திரைப்படங்களில் நல்லது செய்யவேண்டும் என்று அவசியம் இல்லை. அவர் சம்பாதிக்கும் பணம் அவர் உழைப்பு, அந்த பணத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது அவர் விருப்பம். விருப்பம் இருந்தால் படம் பார்க்கலாம், இல்லையெனில் பார்க்கவேண்டாம். பார்க்கவர்றது தானா சேர்ந்த கூட்டம். அவர் ஒரு 'Entertainer', அதை பட்டும் பார்த்தால் சரியாய் இருக்கும். இந்த படம் பற்றிய செய்திகள் வரவேர்ப்பைப்பெற மற்றுமொரு காரணம் அவர் வயதுக்கேற்ற கதாப்பாத்திரம். இவ்வளோ வருஷம் இருந்தவருக்கு, அதுவும் புரிந்திருக்கும். அப்பவும்  70-80 களில் வந்த கபாலி - நெருப்புடா!

மலேசிய தமிழர் - பற்றி அதிகம் நாம் கவனிப்பதில்லை, அங்கே அவர் பிரச்சனைகளை சொல்லும் ஒரு தாதா கதாப்பாத்திரம், அங்கே ஒடுக்கப்பட்டவர்களின் பிரச்சனையை ரஞ்சித் இயக்க ரஜினி நடித்து கொடுத்தால் நடக்கும் ஒரு மாய நதி கரைபுறண்டு ஓடும் கதையாக இருக்குமென்பது என் கணிப்பு. சில வாரங்கள் காத்திருப்போம்.

No comments:

Post a Comment