Friday, 14 April 2017

7 குதிரைகளின் மீதேறி பகலவனின் மேடாயனம் விஜயம்

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என்றும் சொல்லலாம். தமிழ் பேசி, படித்து, எழுதி, தமிழ் கலாச்சாரம் ஒன்றி வளர்ந்த தமிழனாக வெறுமனே புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என்று சொல்வதே உகந்ததென அவ்வாறே தெரிவிக்கிறேன்.

இவ்வாறாக வாழ்த்தியவுடனே தமிழறிஞர் பெருமக்கள் தைத்திருநாளே புத்தாண்டு என்று ஒரு கூற்றையும் முன்வைக்கின்றனர். இதில் எனக்கு சில முரண்பாடுங்கள் இருக்கின்றது, கலைஞர் கருணாநிதி கூறி தான் இது எனக்கு தெரியவந்தது, பல இலக்கியங்களை காட்டி இங்கேயெல்லாம் இவ்வாறு குறிப்பிறதென்றும்  என் நண்பர்கள் சுட்டிக்காட்டினர்.

நான் பள்ளியில் கற்றதும், எனது பெற்றோர் எனது நட்புவட்டம் என அனைவரும் பிறந்தது முதலே கொண்டாடி வந்தது வெகு சிலரால் மாற்றப்பதுவதில் தவறில்லை ஆனால் அதன்பின் இருக்கும் அர்த்தம் என்னைப்பொறுத்தவரையில் மிகவும் முக்கியம். சித்திரை வைகாசி என மனப்பாடம்செய்த மனதுக்கு தை மாசி என்று சொல்ல வரவில்லை.

சித்திரையை ஏன் கொண்டாடுகிறோம்? இதுவே வசந்தகாலம் பூத்துக்குலுங்கும் மரங்கள், எங்கும் பசுமை மைய்யம் கொள்ளும் இந்த காலமே 'உயிர்கள் துளிர்விடும்' காலம். இது இயற்கையான நிகழ்வு, ஒரு சுழற்ச்சி. துளிர்த்து வளர்ந்து உதிர்ந்தும் சற்று இளைப்பாறி மீண்டும் துளிர்க்கும் தாவரங்கள் மட்டுமில்லை. பூமி சுழல்வதால் சூரியக்கதிரின் வீரியமும் இப்போது தான் மீண்டெழும். அதனாலேயே தமிழறின்றி ஏனைய பலரும் இதை கொண்டாடுகின்றனர். அதாவது வடதுருவம் முதல் புவிமத்திய ரேகை வரை சார்ந்த நிலப்பகுதியில் வாழ்பவர்களுக்கு. ஆஸ்திரேலியர்களுக்கு இது இலையுதிர் காலம்.

பல்கலாச்சாரங்களில் கடவுள் படைத்ததாக கூறப்படும் இந்த உலகில் நிகழும் பல இயற்க்கை நிகழ்வுகளை பிரமித்து பார்த்து அவற்றில் 'இறை'ச்சாயம் அடித்து நான் காண்பதெல்லாம் இயற்க்கையின் நிகழ்வுகளின்றி வேறில்லை.

அவ்வாறே தைத்திருநாள், அறுவடைக்காலம் தான் நமக்கு புத்தாண்டு என்று உழவர் கொண்டாடுவதாக எடுத்துக்கொண்டாலும், அவை மனிதற்சார்ந்த, அறுவடை சார்ந்த ஒரு நிகழ்வு. வாழ்வாதராம் சம்படந்தப்பட்ட ஒரு பண்டிகை. ஆனால் உலகில் மனிதர்மட்டுமே வாழ்வதில்லையே, என்னை பொறுத்தவரை(யும்) சித்திரைத்திருநாளே புத்தாண்டு. சமஸ்கிருதத்தில் 60 வருடப்பெயர்கள் இருப்பதால் நாம் அதே நாளில் புத்தாண்டு கொண்டாட மாட்டோம் என்று சொல்வது பிதற்றல். பூமியும் சூரியனும் எந்த மொழியில் சொன்னாலும் வேறு ஆகப்போவதில்லை. மனிதர்களை மனிதர்களாக மட்டுமே பார்க்கவும், மனிதர்கள் ஏனைய உயிரினங்களிலிருந்து உயர்வாக பார்ப்பதும் தவறு. இயற்கையை ரசிக்கவும், வழிபடுவதும் வழிபடாததும் அவரவர் விருப்பம். வாழலாம், ரசிக்கலாம், 'வாழவிடலாம், வழிபடவிடலாம்' என்று கூற அதிகாரம் யாருக்குமில்லை. படித்தது போதும், சூரியன் மேடாயனம் (Vernal equinox மேஷ ராசி என்றும் அன்போடு அழைக்கலாம்) பிரவேசம் செய்கிறார், வெளியே போய் இயற்கையை ரசிக்கலாம். 

No comments:

Post a Comment